மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் எடுத்துச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தீக்காயமடைந்த சபாக் பெர்னாமை சேர்ந்த 19 வயது இளைஞர் முகமது இமான் ஷா, தற்போது உடல் நலம் வருகிறார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நிகழ்ந்த இந்த விபத்து, மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்திலிருந்த கான்கிரீட் மூடி ஒன்றின் மீது மோதி நிலைதடுமாறி விழுந்ததினால் பெட்ரோல் பாட்டில் தீப்பிடித்து அவரது உடல் மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது.
கடுமையான தீக் காயங்களுக்கு ஆளான அவர், சபா பெர்ணம் மருத்துனையிலிருந்து கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், எனினும் விபத்தின் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்றும் அவரது 45 வயதுடைய அவரின் தாயார் ருசிதா முகமது ஷஹ்ரானி தெரிவித்துள்ளார்.








