2018 பொதுத்தேர்தலுக்கு முன்பு லெபனான் நிறுவனம் அனுப்பிய 44 ஆபரணங்களில் எதனையுமே தான் அணிந்ததில்லை என ரோஸ்மா மன்சூர் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமது கணவர் நஜிப் ரசாக்கிற்காக பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் தாம் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால் , அந்த நகைகள் அனைத்தும் பாதுகாப்பாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.
புருணை சுல்தான், சுல்தான் ஹாசனல் போல்கியாவின் மனைவிகளில் ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த நிறுவன உரிமையாளரைத் திருப்திப்படுத்தவே நகைகளைத் தன்னிடம் வைத்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும்போது அந்த நகைகளும் 'பெவிலியன் ரெசிடென்ஸிற்கு' மாற்றப்பட்டன.
தாங்கள் அங்கு இல்லாதபோது நடந்த போலீஸ் சோதனையில் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பின்னர் அவற்றைச் சோதித்தபோது பல நகைகள் "காணாமல்" போயிருந்ததாகவும் ரோஸ்மா தெரிவித்தார்.
மொத்தம் 1.46 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான 43 நகைகளைத் திரும்பக் கோரி குளோபல் ராயல்டி நிறுவனம் தொடுத்துள்ள வழக்கில் சாட்சியம் அளிக்கையில் ரோஸ்மா இதனை தெரிவித்துள்ளார்.








