Jun 29, 2026
Thisaigal NewsYouTube
எந்தவொரு கோரிக்கையும் மலாய் மொழிக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டும்: பிரதமர் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

எந்தவொரு கோரிக்கையும் மலாய் மொழிக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டும்: பிரதமர் கூறுகிறார்

Share:

லங்காவி, டிசம்பர்.12-

மதம் மற்றும் இன உணர்வுகளுக்கு வழிவகுக்கும் எந்தவொரு கோரிக்கையும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள தேசிய மொழியான மலாய் மொழியின் நிலையைக் கருத்தில் கொண்டு, அதற்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

மலாய் மொழியின் நிலை குறித்து கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள கொள்கைகள் முதன்மையாகக் கருத்தில் கொண்டு, அவற்றை ஆதரித்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

அண்மைய காலமாக மொழி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. சிலர் ஆங்கில மொழியை வலியுறுத்த விரும்புகிறார்கள். இன்னும் சிலர் யுஇசி எனப்படும் ஒருங்கிணைந்தத் தேர்வுச் சான்றிதழை அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

எனினும் இது மலேசிய நாடாகும். மலாய் மொழி பிரதான தேசிய மொழியாகும். எந்தவொரு மொழியையும் கொண்டு வருவதற்கு முயற்சிக்கும் எவரும், தேசிய மொழியான மலாய் மொழியில் அனைத்து மலேசியர்களும் ஆளுமை கொண்டிருப்பதற்கு அதனை அறிவு மொழியாக உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு