May 6, 2026
Thisaigal NewsYouTube
எந்தவொரு கோரிக்கையும் மலாய் மொழிக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டும்: பிரதமர் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

எந்தவொரு கோரிக்கையும் மலாய் மொழிக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டும்: பிரதமர் கூறுகிறார்

Share:

லங்காவி, டிசம்பர்.12-

மதம் மற்றும் இன உணர்வுகளுக்கு வழிவகுக்கும் எந்தவொரு கோரிக்கையும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள தேசிய மொழியான மலாய் மொழியின் நிலையைக் கருத்தில் கொண்டு, அதற்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

மலாய் மொழியின் நிலை குறித்து கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள கொள்கைகள் முதன்மையாகக் கருத்தில் கொண்டு, அவற்றை ஆதரித்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

அண்மைய காலமாக மொழி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. சிலர் ஆங்கில மொழியை வலியுறுத்த விரும்புகிறார்கள். இன்னும் சிலர் யுஇசி எனப்படும் ஒருங்கிணைந்தத் தேர்வுச் சான்றிதழை அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

எனினும் இது மலேசிய நாடாகும். மலாய் மொழி பிரதான தேசிய மொழியாகும். எந்தவொரு மொழியையும் கொண்டு வருவதற்கு முயற்சிக்கும் எவரும், தேசிய மொழியான மலாய் மொழியில் அனைத்து மலேசியர்களும் ஆளுமை கொண்டிருப்பதற்கு அதனை அறிவு மொழியாக உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்