Mar 15, 2026
Thisaigal NewsYouTube
எந்தவொரு கோரிக்கையும் மலாய் மொழிக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டும்: பிரதமர் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

எந்தவொரு கோரிக்கையும் மலாய் மொழிக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டும்: பிரதமர் கூறுகிறார்

Share:

லங்காவி, டிசம்பர்.12-

மதம் மற்றும் இன உணர்வுகளுக்கு வழிவகுக்கும் எந்தவொரு கோரிக்கையும் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள தேசிய மொழியான மலாய் மொழியின் நிலையைக் கருத்தில் கொண்டு, அதற்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

மலாய் மொழியின் நிலை குறித்து கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள கொள்கைகள் முதன்மையாகக் கருத்தில் கொண்டு, அவற்றை ஆதரித்து பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

அண்மைய காலமாக மொழி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. சிலர் ஆங்கில மொழியை வலியுறுத்த விரும்புகிறார்கள். இன்னும் சிலர் யுஇசி எனப்படும் ஒருங்கிணைந்தத் தேர்வுச் சான்றிதழை அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

எனினும் இது மலேசிய நாடாகும். மலாய் மொழி பிரதான தேசிய மொழியாகும். எந்தவொரு மொழியையும் கொண்டு வருவதற்கு முயற்சிக்கும் எவரும், தேசிய மொழியான மலாய் மொழியில் அனைத்து மலேசியர்களும் ஆளுமை கொண்டிருப்பதற்கு அதனை அறிவு மொழியாக உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்