Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சுல்தானின் அறைகூவலை சாதாரணமாக கருத முடியாது
தற்போதைய செய்திகள்

சுல்தானின் அறைகூவலை சாதாரணமாக கருத முடியாது

Share:

மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மும், தேசிய பெட்ரோலிய உற்பத்தி நிறுவனமான பெட்ரோனாஸ் – ஸும், மாமன்னரின் மேற்பார்வையில் வர வேண்டும், மாமன்னருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கன்டார் விடுத்துள்ள அறைகூவலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தில் இப்படியொரு அதிகாரம் இருப்பதாக குறிப்பிடப்படவில்லை என்ற போதிலும் ஜோகூர் சுல்தான் முன்வைத்துள்ள இப்பரிந்துரையானது, அரசமைப்பின் ஆட்சியாளர் என்ற முறையில் மலாய் ஆட்சியாளர்களின் பங்களிப்பு தொடர்பாக சில முக்கிய கேள்விகள் எழுவதாக துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தை ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் ஒவ்வொருவருக்கும், மாமன்னருக்கும் உள்ள பொறுப்புகள் மற்றும் அதிகார வரம்புகள் குறித்து அரசமைப்பிலும், சட்டங்களில் மிக விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.

எந்தவொரு சட்டமாக அல்லது கொள்கையாக இருந்தாலும் ஆட்சியாளர்களும், நாடாளுமன்றமும் இணைந்தே முடிவு எடுக்க முடியும். இது தரப்புகளுக்கு இடையே அதிகாரப் பகிர்வு என்பது இணைந்தே முடிவு எடுப்பது, முழு அதிகாரத்தை விட பாதுகாப்பானதாகும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்