Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பொது போக்குவரத்துப் பயணிகளின் பயணத்தன்மை மாறாது
தற்போதைய செய்திகள்

பொது போக்குவரத்துப் பயணிகளின் பயணத்தன்மை மாறாது

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.29-

புடி95 திட்டத்தின் வாயிலாக பெட்ரோல் ரோன் 95 விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது என்ற போதிலும், இதுநாள் வரையில் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்த பயணிகள், தங்கள் பயண முறையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்தார்.

பெட்ரோல் விலை குறைந்து விட்டது என்பதற்காக அவரவர் சொந்த வாகனத்தைப் பயன்படுத்தும் போக்குவரத்து முறையைக் காட்டிலும், பொது போக்குவரத்து செலவினத்தைக் குறைக்க வல்லதாகும். நடைமுறைக்கு அதிக பொருந்தக்கூடியதாகும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பொது போக்குவரத்தில் மாதம் 50 ரிங்கிட் கட்டணம் என்பது நியாயமானதாகும். செளகரியமான பயண முறை, பயண நேரத்தை மீதப்படுத்தக்கூடியதாகும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

பெட்ரோல் விலை குறைவதால், பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்த பயணிகள், சொந்த வாகனங்களுக்கு மாறக்கூடுமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் அந்தோணி லோக் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப், பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு