கோலாலம்பூர், ஜூலை.11-
ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைப்பதற்காகக் கல்வி அமைச்சு ஏழு செயல் திட்ட நடவடிக்கைகளை அமல்படுத்தவுள்ளது என்று அமைச்சர் ஃபட்லீனா சீடேக் கூறியுள்ளார்.
அதில், முக்கியமற்ற பள்ளி நிகழ்வுகளை ரத்து செய்தல், தேர்வு கண்காணிப்பாளர்களாகப் பொதுமக்களை நியமித்தல், தினசரி பாடத்திட்டப் பதிவுகளை எளிமைப்படுத்துதல் போன்ற கூறுகள் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மலேசிய கல்வித் தரநிலை மதிப்பீடுகளைக் குறைத்தல், மாணவர் வருகை பதிவைச் சுலபமாக்குதல், கல்வி கற்பிக்கும் முறையில் ஆசிரியர்களுக்குக் கூடுதல் அதிகாரம் போன்ற அம்சங்கள் ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாக ஃபட்லீனா சீடேக் குறிப்பிட்டார்.








