May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ஜப்பானில் பயின்று வரும் மலேசிய மாணவி காணவில்லை

Share:

ஷா ஆலாம், ஜன.30-

ஜப்பானில் ஹிரோஷிமாவில் பயின்று வரும் மலேசிய மாணவி ஒருவர் காணவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுரின் ஹன்னானி ஹபிசி என்ற 21 வயதுடைய அந்த மாணவி, கடந்த திங்கட்கிழமை முதல் காணவில்லை என்று ஜப்பானில் உள்ள மலேசிய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை கைப்பை, பணப்பை மற்றும் கடப்பிதழுடன் வெளியே சென்ற அந்த மாணவி பின்னர் தாம் தங்கியிருந்த பல்கலைக்கழக தங்கும் விடுதிக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பம் தொடர்பில் மாணவர் சங்கம், போலீசில் புகார் செய்துள்ளது.

Related News