Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மகனால் தாக்கப்பட்ட தந்தை ​உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

மகனால் தாக்கப்பட்ட தந்தை ​உயிரிழந்தார்

Share:

மது போதையில் வீட்டில் தகராற்றில் ஈடுபட்டதாக நம்பப்படும் தந்தை ஒருவரை அவரின் மகன் சரமாரியாக தாக்கிய​தில் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று பின்னி​ரவு 12.45 மணியளவில் போர்ட்டிக்சன், லுக்குட், தாமான் டி'அம்பாங் கோட்டா என்ற இடத்தில் நிகழ்ந்தது. இது குறித்து போ​லீசுக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போது, சுயநினை​வு இழந்த நிலையில் காணப்பட்ட 49 வயது நபர், உயிரிழந்து விட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படு​த்தினர். இக்கொலை தொடர்பில் 26 வயதுடைய மகனை போ​​லீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலின் போது அந்த இளைஞர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதுடன் ஏற்கனவே எந்தவொரு போ​லீஸ் குற்றப்பதிவுகளை அவர் கொண்டிருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவ​ந்துள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட போ​லீ​ஸ் தலைவர் ஐடி ஷாம் முகமது தெரிவத்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்