மது போதையில் வீட்டில் தகராற்றில் ஈடுபட்டதாக நம்பப்படும் தந்தை ஒருவரை அவரின் மகன் சரமாரியாக தாக்கியதில் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று பின்னிரவு 12.45 மணியளவில் போர்ட்டிக்சன், லுக்குட், தாமான் டி'அம்பாங் கோட்டா என்ற இடத்தில் நிகழ்ந்தது. இது குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போது, சுயநினைவு இழந்த நிலையில் காணப்பட்ட 49 வயது நபர், உயிரிழந்து விட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இக்கொலை தொடர்பில் 26 வயதுடைய மகனை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலின் போது அந்த இளைஞர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதுடன் ஏற்கனவே எந்தவொரு போலீஸ் குற்றப்பதிவுகளை அவர் கொண்டிருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் ஐடி ஷாம் முகமது தெரிவத்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


