மது போதையில் வீட்டில் தகராற்றில் ஈடுபட்டதாக நம்பப்படும் தந்தை ஒருவரை அவரின் மகன் சரமாரியாக தாக்கியதில் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று பின்னிரவு 12.45 மணியளவில் போர்ட்டிக்சன், லுக்குட், தாமான் டி'அம்பாங் கோட்டா என்ற இடத்தில் நிகழ்ந்தது. இது குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போது, சுயநினைவு இழந்த நிலையில் காணப்பட்ட 49 வயது நபர், உயிரிழந்து விட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இக்கொலை தொடர்பில் 26 வயதுடைய மகனை போலீசார் கைது செய்துள்ளனர். தாக்குதலின் போது அந்த இளைஞர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதுடன் ஏற்கனவே எந்தவொரு போலீஸ் குற்றப்பதிவுகளை அவர் கொண்டிருக்கவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போர்ட்டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் ஐடி ஷாம் முகமது தெரிவத்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


