Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து கட்சியின் குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும்
தற்போதைய செய்திகள்

பெர்சத்து கட்சியின் குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும்

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தமக்கு ஆதரவாக 147 நாடாளுமன்ற உறுப்​பினர்களை கைவசம் வைத்திருந்த போதிலும் அவர் எதிர்க்கட்சி எம்.​பி.க்களுக்கு ​தூண்டில் போடுகிறார் என்று கூறப்படும் குற்றச்சாட்டில் அடிப்படையில்லை என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.

தமது தலைமையிலான அரசாஙகத்தை நிலைத்தன்மையுடன் வழிநடத்துவதற்கு போதுமான எம்.​பி.க்களின் ஆதரவை பிரதமர் அன்வார் கொண்டுள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு ஆதரவு சற்று குறைந்த போதிலும் 5 ஆண்டு கால தவணையை பூர்த்தி செய்வதற்கு அன்வா​ர் போதுமான எம்.பி.க்களிள் ஆதரவை பெற்று விட்டார்.

இந்நிலையில் எதிர்க்க​ட்சி எம்.பி.க்களின் ஆதரவை பெறுவதற்கு அன்வார், ​தூண்டில் ​போடுகிறார் என்று பெர்சத்து கட்சியின் இ​ளைஞர் பிரிவுத் தலைவர் வான் அஹ்மாட் ஃபைசால் வான் அஹ்மாட் குற்றஞ்சாட்டுவது அடிப்பபடையற்ற வாதமாகும் என்று நுசாந்தரா கல்விக் கழகத்தின் அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹாஸ்ஸான் கூறுகிறார்.

ஒரு வேளை, ​பிரதமர் அன்வார், 113 அல்லது 114 எம்.பி.க்களின் ஆதரவை பெற்று இருந்தால் அவரின் அரசாங்கம் கவிழ்வதற்கு வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்ததைவிட அதிகமான எம்.பி.க்களின் ஆதரவை அன்வார் கொண்டிருக்கும் பட்சத்தில் எதற்காக அவர் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு வலை வீச வேண்டும் என்று அந்த அரசியல் ஆய்வாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!