Feb 28, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் அரண்மனை சார்பில் 2000 பொதிகள் நோன்புக் கஞ்சி விநியோகம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் அரண்மனை சார்பில் 2000 பொதிகள் நோன்புக் கஞ்சி விநியோகம்

Share:

ஜோகூர் பாரு, பிப்ரவரி.28-

ரமலான் மாதத்தை முன்னிட்டு, ஜோகூர் அரண்மனை சார்பில், மூவார், ஜோகூர் பாரு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, சுமார் 2000 பொதிகள் பூபூர் லம்பூக் என்றழைக்கப்படும் “நோன்புக் கஞ்சியானது” விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 25 மற்றும் 27-ஆம் தேதிகளில், அரண்மனை நிர்வாகி Faizol Abdullah, மாவட்ட அதிகாரிகளிடம், நோன்புக் கஞ்சி அடங்கிய பொதிகளை வழங்கினார்.

அப்பொதிகளானது, உதவிகள் தேவைப்படும் இஸ்லாமியர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.

இந்த நோன்புக் கஞ்சி விநியோகமானது, கடந்த 2020-ஆம் ஆண்டு முதல், மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும் ரமலான் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாகும்.

இத்திட்டமானது, உதவி தேவைப்படும் மக்களின் நலன்களில் சுல்தானின் அக்கறையை வெளிப்படுத்துவதோடு, ரமலான் மாதம் முழுவதும் ஒற்றுமை மற்றும் கருணை உணர்வை வளர்ப்பதாக மாமன்னரின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

குண்டாங் ஏரி விபத்தில் 3 உயிர்களைக் காத்த 7 இளைஞர்களுடன் பிரதமர் நேரில் சந்திப்பு: வீர செயல்களைப் பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்

குண்டாங் ஏரி விபத்தில் 3 உயிர்களைக் காத்த 7 இளைஞர்களுடன் பிரதமர் நேரில் சந்திப்பு: வீர செயல்களைப் பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்

2028-ஆம் ஆண்டிற்குள் கிளானா ஜெயா என எல்ஆர்டி ரயில் சேவையில் 26 புதிய ரயில்கள்: போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு

2028-ஆம் ஆண்டிற்குள் கிளானா ஜெயா என எல்ஆர்டி ரயில் சேவையில் 26 புதிய ரயில்கள்: போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவிப்பு

புக்கிட் பெருந்தோங்கில் பெண்ணிடம் நகை கொள்ளை முயற்சி: இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

புக்கிட் பெருந்தோங்கில் பெண்ணிடம் நகை கொள்ளை முயற்சி: இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

பெட்டாலிங் ஜெயாவில் போக்குவரத்திற்கு எதிர்த் திசையில் காரைச் செலுத்தி பரபரப்பை ஏற்படுத்திய நபர் கைது

பெட்டாலிங் ஜெயாவில் போக்குவரத்திற்கு எதிர்த் திசையில் காரைச் செலுத்தி பரபரப்பை ஏற்படுத்திய நபர் கைது

நீலாய் வெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 63 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

நீலாய் வெடிப்புச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 63 வயது முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

ரவூப் தீ விபத்து: 5 குடும்ப உறுப்பினர்களை இழந்த அக்கா, தம்பிக்கு ஸாஹிட் ஆறுதல்

ரவூப் தீ விபத்து: 5 குடும்ப உறுப்பினர்களை இழந்த அக்கா, தம்பிக்கு ஸாஹிட் ஆறுதல்