Dec 2, 2025
Thisaigal NewsYouTube
36 வங்கிக் கணக்குகள் முடக்கம்: எஸ்பிஆர்எம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

36 வங்கிக் கணக்குகள் முடக்கம்: எஸ்பிஆர்எம் அறிவிப்பு

Share:

புத்ராஜெயா, நவம்பர்.15-

மொத்தம் 3.1 மில்லின் ரிங்கிட்டிற்கும் கூடுதலாக 36 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி அறிவித்துள்ளார்.

பத்து அமலாக்க அதிகாரிகள் மற்றும் ஒரு முன்னாள் அமலாக்க அதிகாரி என 11 பேர் சம்பந்தப்பட்ட 36 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மறுகட்டமைப்புத் திட்டத்தின் வாயிலாக அவர்களின் விண்ணப்பங்களை அங்கீகரிப்பதில் இந்த பத்து அமலாக்க அதிகாரிகளும் பணி ஓய்வு பெற்ற ஒரு முன்னாள் அதிகாரியும் லஞ்சம் பெற்று வந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று அஸாம் பாக்கி தெரிவித்தார்.

தவிர, நான்கு கார்கள், ஐந்து மோட்டார் சைக்கிள்கள், தங்கப் பாலங்கள், நான்கு சங்கிலிகள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவையும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்