நிபோங் திபால், ஜன.2-
6 வயது சிறுவன் ஒருவன், மடக்கு மேஜையின் இடிபாட்டில் சிக்கி மரணமுற்றான். இச்சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 4.15 மணியளவில் பினாங்கு, நிபோங் திபால், தாமான் ஸ்ரீ புத்ராவில் நிகழ்ந்தது.
தனது தாயார் வாடகைக்கு இருந்த டவுன் ஹவுஸ் குடியிருப்புப்பகுதியில் அந்த சிறுவன் விளையாடிக்கொண்டு இருந்த போது, இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
சிறுவனின் சத்தம் எதுவும் கேட்காமல் இருந்ததைத் தொடர்ந்து அவனது தாயாரும், இதர சகோதரர்களும் வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது மடக்கு மேஜையின் இடிப்பாட்டில் அந்த சிறுவன் சிக்கிக்கிடந்ததை உணர்ந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.








