Feb 5, 2026
Thisaigal NewsYouTube
ஜூன் மாதத்திற்குள் எல்ஆர்டி3 ஷா ஆலாம் தடம் தொடக்கம்: அமைச்சர் அந்தோணி லோக் உறுதி
தற்போதைய செய்திகள்

ஜூன் மாதத்திற்குள் எல்ஆர்டி3 ஷா ஆலாம் தடம் தொடக்கம்: அமைச்சர் அந்தோணி லோக் உறுதி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.05-

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட எல்ஆர்டி3 ஷா ஆலம் ரயில் சேவை, இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

அனைத்து சோதனைகளும் சுமூகமாக முடிந்தால், ஏப்ரல் மாதத்திலேயே இந்தச் சேவையைத் தொடங்க வாய்ப்புள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக அக்டோபர் மாதம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கான கூடுதல் சோதனைகளால் தள்ளிப் போனது.

குறிப்பாக, ஒரு ரயில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏதுமின்றி 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய 'பிழையற்ற ஓட்டம்' சோதனை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

பெட்டாலிங் ஜெயா பண்டார் உத்தாமா முதல் கிள்ளான் ஜோஹான் செத்தியா வரை 37.8 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட எல்ஆர்டி3 ரயில் வழித்தடம், கிள்ளான் பள்ளத்தாக்கின் மேற்குப் பகுதியில் உள்ள சுமார் 20 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

அல்தான்துயா கொலை வழக்கு: 4.7 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைத்தது குடும்பம்

அல்தான்துயா கொலை வழக்கு: 4.7 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைத்தது குடும்பம்

பழைய லாரியை 'போதைப் பொருள் கிடங்காக' மாற்றிய கும்பல்: ஈப்போவில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்

பழைய லாரியை 'போதைப் பொருள் கிடங்காக' மாற்றிய கும்பல்: ஈப்போவில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்

தலைமறைவான ‘கேப்டன் பிரபா’ கும்பலின் முக்கியப் புள்ளி  பேங்காக்கில் அதிரடியாகக் கைது: புக்கிட் அமான்  நடவடிக்கை

தலைமறைவான ‘கேப்டன் பிரபா’ கும்பலின் முக்கியப் புள்ளி பேங்காக்கில் அதிரடியாகக் கைது: புக்கிட் அமான் நடவடிக்கை

பினாங்கில் தனித்து வாழும் தாயார் கொலை வழக்கு: இரண்டு ஆண்கள் கைது

பினாங்கில் தனித்து வாழும் தாயார் கொலை வழக்கு: இரண்டு ஆண்கள் கைது

மித்ரா  திட்டத்தின் கீழ் 1 லட்சம் வெள்ளி நிதியுதவி மீண்டும் தொடக்கம்: அமைச்சர் ஆர். ரமணன் அறிவிப்பு

மித்ரா திட்டத்தின் கீழ் 1 லட்சம் வெள்ளி நிதியுதவி மீண்டும் தொடக்கம்: அமைச்சர் ஆர். ரமணன் அறிவிப்பு

அடுக்குமாடிக் குடியிருப்பில் புலியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டு: தொழிலதிபருக்கு 2 ஆண்டுகள் சிறை, 3 லட்சம் ரிங்கிட் அபராதம்

அடுக்குமாடிக் குடியிருப்பில் புலியை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டு: தொழிலதிபருக்கு 2 ஆண்டுகள் சிறை, 3 லட்சம் ரிங்கிட் அபராதம்