ஹரிராயா பெருநாளை முன்னிட்டு ஒரு நாள் கூடுதல் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது மூலம் உற்பத்தித் துறையைச் சேர்ந்தர்வர்களுக்குக் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அல்லது 100 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று மலேசிய உற்பத்தித்துறை சம்மேளனத்தின் தலைவர் டான் டான் ஶ்ரீ சொஹ் தியான் லாய் தெரிவித்துள்ளார். சிறப்பு விடுமுறை வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை என்று ஒரு குத்துமதிப்பாக அரசாங்கம் அறிவித்து இருக்கக்கூடாது என்று சொஹ் தியான் லாய் குறிப்பிட்டார்.
இது போன்ற நடவடிக்கை அரசாங்கத்திற்குக் கூடுதல் மதிப்பை ஏற்படுத்தி விடாது. மாறாக, நாட்டின் உற்பத்தித்துறை வெகுவாக பாதிக்கும் என்பதுடன் வணிகர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்திவிடும் என்று அந்தச் சம்மேளனத்தின் தலைவர் விளக்கினார்.
உற்பத்தியில்லாத இந்த ஒரு நாள் சிறப்பு விடுமுறையினால் வேலை வழங்கப்படாமலேயே தொழிலாளர்களுக்கு கிட்டத்தட்ட 70 கோடி வெள்ளியை தொழிற்சாலைகள் சம்பளமாக வழங்க வேண்டியுள்ளது என்பதுடன் மொத்தம் 100 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொஹ் தியான் லாய் குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


