Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பிற்போக்கான சிந்தனை நாட்டை சீரழிக்கும் ! - மகாதீருக்கு பதிலடி கொடுத்த பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

பிற்போக்கான சிந்தனை நாட்டை சீரழிக்கும் ! - மகாதீருக்கு பதிலடி கொடுத்த பிரதமர் அன்வார்

Share:

செர்டாங்,ஜன.16
இந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மலேசியா மீது பற்றும் விசுவாசமும் கொள்ள வில்லை. இன்னமும் தங்களின் பூர்வீக நாட்டுடனே பிணைக்கப்பட்டுள்ளார்கள் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கருத்துரைத்திருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இவ்வாறான பிற்போக்குத் தனம் கொண்ட கருத்துகளை இளைய தலைமுறையினர் ஏற்க மாட்டார்கள் எனத் தாம் நம்புவதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தங்களின் தவறுகளை மறைக்கும் முயற்சியில், ஒரு சில முன்னாள் தலைவர்கள் மலாய்க்காரர்கள் மட்டும் இன்றி, சீனர்களும் இந்தியர்களும் நாட்டிற்கு விசுவாசமாக இல்லை எனக் கூறி வருகின்றனர்.

மகாதீர் கூறிய கருத்தை ஒற்றுமை அரசாங்கம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது. முன்னதாக, மலாய்க்காரர்கள் சோம்பேறிகள் எனக் கூறி இருக்கிறார் மகாதீர். தனக்குச் சாதகமாக இருப்பவர்களை மட்டும் அவர் குறை கூற மாட்டார் எனக் குறிப்பிட்டார் பிரதமர் அன்வார்.

அனைத்து மலேசிய மக்களும் இந்நாட்டிற்கு வ்சுவாசமாக இருக்கின்றார்கள். ஆகையால், மகாதீர் கூறிய கருத்தை கடுமையாக எதிர்க்கிறோம் என்றார் அவர்.

சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவைத் தளமாகக் கொண்ட தந்தி டிவிக்கு மகாதீர் ஒஏட்டி அளித்திருந்தார். மலேசியாவில் இருக்கும் மலாய்க்காரர் அல்லாதோர் குறித்து மகாதீரிடம் வினவப்பட்டது.

மலேசியாவில் 4 மாநிலங்களில் ஆட்சி அமைத்திருக்கும் தேசியக் கூட்டணியின் ஆலோசகராக பொறுப்பு வகிக்கும் மகாதீர், மலேசியாவில் இருக்கும் சீனர்களும், இந்தியர்களும் இந்நாட்டிற்கு விசுவாசமாக இல்லை எனக் கூறி இருக்கின்றார்.

மலாய்க்காரர்கள் அல்லாதோரை "வந்தேறிகள்" எனக் கருதும் அவர், மலேசியக் குடிமக்கள் எனும் அந்தஸ்து கிடைத்து விட்ட போதிலும், தங்களின் சொந்த கலாச்சாரத்தை அவர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள் என்றார்.

இந்தக் கருத்து, தேசியக் கூட்டணியின் உறுப்புக் கட்சியான கெராக்கான் உட்பட பலரது விமர்சனத்திற்கு இலக்கானது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்