சுற்றுச்சூழல் துறை தலைமை இயக்குநர் வான் அப்துல் லத்தீப் வான் ஜாபர் மற்றும் அவரது துணை அதிகாரிகளில் ஒருவரான நோர்ஹஸ்னி மாட் சாரி, ஆகியோர் 1 லட்சத்து 21 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் ஆகி குற்றத்தை மறுத்துள்ளனர்.
நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில் 1 லட்சம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை வான் அப்துல் லத்தீப் வான் ஜாபர் மறுத்துள்ளார்.
58 வயதான அவர், கோர் சோங் ஹாய் தலைமையிலான நிறுவனத்திலிருந்து, அதன் திட்ட மேலாளர் லீ ஹாம் காங் மூலம், கடந்த 2025 -ஆம் ஆண்டு, ஜனவரி 15-ஆம் தேதி, புத்ராஜெயாவில் உள்ள தனது அலுவலகத்தில் இந்த லஞ்சத்தை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொது அதிகாரியாக பணியாற்றிய வான் அப்துல் லத்தீப் வான் ஜாபர்க்கு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு விலக்கு கோரிக்கையை பரிசீலிக்க தூண்டுவதற்காக இந்த லஞ்சமானது வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.








