Mar 11, 2026
Thisaigal NewsYouTube
ஆடவருக்கு 2 மாத சிறை
தற்போதைய செய்திகள்

ஆடவருக்கு 2 மாத சிறை

Share:

ஹோர்ன் அடித்தார் என்பதற்காக கிள்ளானில் ஓர் உணவு விநியோகிப்பு பணியாளரை மடக்கி, சரமாரியாக அடித்து காயப்படுத்திய ஓர் ஆடவரின் அடாவடித்தன செயல் தொடர்பான காணொளி, இரண்டு தினங்களுக்கு சமூக வலைத்தளத்தில பரவலாக பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட ஆடவர் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

முகமது பைசல் நஸ்ரி என்ற 39 வயதுடைய பட்டறை பணியாளரான அந்த நபர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு கிள்ளான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 2 மாத சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதித்தது.

சாலையில் அராஜகம் புரியும் வாகனமோட்டிகளுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக சிறைத் தண்டனை விதிப்பதாக மாஜிஸ்திரேட் சிதி ஜுபைதா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

அந்நபர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், ஜாலான் லங்காட் ட்டின் சமிக்ஞை விளக்குப் பகுதியில் 21 வயது உணவு விநியோகிப்பாளரை அடித்து காயப்படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து