Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தொடக்கப் பள்ளிக் குழந்தைகளைக் குறிவைக்கும் போதைப் பொருள் வியாபாரிகள் - ஸாஹிட் ஹமிடி எச்சரிக்கை!
தற்போதைய செய்திகள்

தொடக்கப் பள்ளிக் குழந்தைகளைக் குறிவைக்கும் போதைப் பொருள் வியாபாரிகள் - ஸாஹிட் ஹமிடி எச்சரிக்கை!

Share:

புத்ராஜெயா, செப்டம்பர்.25-

தொடக்கப் பள்ளிகளில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கூட தற்போது போதைப் பழக்கத்தினால் பாதிக்கப்படுவது குறித்து துணைப்பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மிகுந்த கவலை தெரிவித்துள்ளார்.

இது தேசிய அளவிலான அச்சுறுத்தல் என்றும், இப்பிரச்சினை உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும் என்றும் ஸாஹிட் ஹமிடி குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள் விற்கும் முகவர்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக இனிப்புகள் வழங்குவது போல், அவர்களை போதைப் பழக்கத்திற்கு உள்ளாக்குவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இப்பிரச்சினையைச் சமாளிக்க அரசாங்கம், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தேசிய போதைப் பொருள் எதிர்ப்பு நிறுவனம் இன்னும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

போதைப் பொருள் கடத்தலைக் கண்டறிவதிலும், அது விநியோகம் செய்யப்படுவதைத் தடுப்பதிலும் இன்னும் அதிக உத்திகள் தேவை என்று ஸாஹிட் தெரிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்