May 26, 2026
Thisaigal NewsYouTube
600 க்கும் மேற்பட்ட மாதிரி துப்பாக்கிகள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

600 க்கும் மேற்பட்ட மாதிரி துப்பாக்கிகள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர், டிச.21-


கோலாலம்பூர் மற்றும் கிளந்தானில் போலீசார் மேற்கொண்ட தொடர் சோதனை நடவடிக்கையில் இரண்டு பறவைகளுடன் 600க்கும் மேற்பட்ட மாதிரி துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் வனவிலங்கு பாதுகாப்பு குற்றவியல் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையில் கோத்தாபாரு மற்றும் கோலாலம்பூர் ஜாலான் ராஜா லாவுட் ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மாதிரி சுடும் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குப்பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட மாதிரி துப்பாக்கிகளில் 32 ரபில் மற்றும் 2 ரோக்ஸ் மாக்ப்லெஸ் ஆயுதங்களும் அடங்கும். தவிர, சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்படாத சில மருந்துப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சந்தேக நபர், பல மாதங்களாக இணையத் தொடர்பு வாயிலாாக இந்த மாதிரி துப்பாக்கிகளை விற்பனை செய்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் மருந்துப்பொருட்களின் மொத்த மதிப்பு 4 லட்சத்து 36 ஆயிரத்து 971 ரிங்கிட்டாகும் என்று அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு

600 க்கும் மேற்பட்ட மாதிரி துப்பாக்கிகள் பறிமுதல் | Thisaigal News