கடந்த வெள்ளிக்கிழமைசுபாங், ஜாலான் பெர்சியாரன் புத்ரா, புத்ரா ஹையிட்ஸ் பாலத்தின் கீழ் மனித எலும்புக்கூடு கண்டு பிடிக்கப்பட்ட சம்பவத்தில் குற்றத்தன்மைக்கான அம்சங்கள் இல்லை என்று சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமத் தெரிவித்தார்.
அந்த மனித எலும்புக்கூடு, செர்டாங் மருத்துவமனையில் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, காயம் ஏற்பட்டதற்கான எந்தவொரு அறிகுறியும் தென்படவில்லை என்று உடல்கூறு நிபுணர்கள் உறுதி செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. ஓர் உயரமான இடத்திலிருந்து குதித்தால் மட்டுமே எலும்புகளில் இத்தகைய முறிவுகள் ஏற்பட்டு இருக்கலாம் என்று தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.








