எதிர்வருகின்ற மாநில பொது தேர்தலில், தான் போட்டியிடுவதினால், பெரிக்காத்தான் நெசனல் கூட்டணிக்குப் பெரிய அளவிலான வெற்றி கிட்டும் எனில், தான் போட்டியிட தயார் என ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஷஹீடான் கசிம் அறைகூவல் விடுத்துள்ளார்.
71 வயதான ஷஹீடான் கசிம், எதிர்வருகின்ற மாநில பொது தேர்தலில் பெரிக்கத்தான் நெசனல், கெடா, கிளந்தான், திரங்கானு, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களைக் கைப்பற்றி பெரிய அளவிலான வெற்றி அலையை உருவாக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை உண்டு என அவர் கூறினார். இந்த மாநிலங்கள் பெரிக்காத்தான் நேஷ்னல் கைகளுக்கு வருவதற்காக தான் எந்த இடத்திலும் போட்டியிட தயார் என ஷஹிடான் கூறினார்.
எதிர்வருகின்ற மாநில பொது தேர்தலில் ஷஹிடான் கசின் சிலாங்கூர் மாநிலத்தின் செமினி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


