எதிர்வருகின்ற மாநில பொது தேர்தலில், தான் போட்டியிடுவதினால், பெரிக்காத்தான் நெசனல் கூட்டணிக்குப் பெரிய அளவிலான வெற்றி கிட்டும் எனில், தான் போட்டியிட தயார் என ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ ஷஹீடான் கசிம் அறைகூவல் விடுத்துள்ளார்.
71 வயதான ஷஹீடான் கசிம், எதிர்வருகின்ற மாநில பொது தேர்தலில் பெரிக்கத்தான் நெசனல், கெடா, கிளந்தான், திரங்கானு, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களைக் கைப்பற்றி பெரிய அளவிலான வெற்றி அலையை உருவாக்கும் என்பதில் தனக்கு நம்பிக்கை உண்டு என அவர் கூறினார். இந்த மாநிலங்கள் பெரிக்காத்தான் நேஷ்னல் கைகளுக்கு வருவதற்காக தான் எந்த இடத்திலும் போட்டியிட தயார் என ஷஹிடான் கூறினார்.
எதிர்வருகின்ற மாநில பொது தேர்தலில் ஷஹிடான் கசின் சிலாங்கூர் மாநிலத்தின் செமினி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது


