May 5, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 64 வயது மூதாட்டி படுகாயம்
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 64 வயது மூதாட்டி படுகாயம்

Share:

ஈப்போ, ஜனவரி.31-

ஈப்போ தாமான் கிளேடாங் எமாஸ் பகுதியிலுள்ள வீடு ஒன்றில், நேற்று அதிகாலை 5 மணியளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் 63 வயது மூதாட்டி படுகாயமடைந்தார்.

சமையலறையில் உள்ள எரிவாயு சிலிண்டரின் மூடியை, அந்த மூதாட்டி அடைக்க முயன்ற போது இவ்விபத்து நிகழ்ந்ததாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

உறக்கத்திலிருந்து எழுந்த அம்மூதாட்டியின் மகள் ஒருவர், கடுமையான எரிவாயுக் கசிவை வீட்டில் உணர்ந்தவுடன், தனது தாயாருக்கும், சகோதரிக்கும் தகவல் தெரிவித்து உடனடியாக வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.

ஆனால், அவர்கள் வெளியேறும் முன்பு, அந்த மூதாட்டி சமயலறைக்குச் சென்று எரிவாயு சிலிண்டரின் மூடியை அடைக்க முயன்ற போது, இவ்விபத்து நேர்ந்ததாக நம்பப்படுகின்றது.

இவ்விபத்தில் முதாட்டியின் முகம் மற்றும் உடல் முழுவதும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டு தற்போது ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்