Jul 2, 2026
Thisaigal NewsYouTube
லஞ்சப் பணத்தில் நகைக் கடையைத் திறந்த குடிநுழைவுத்துறை அதிகாரிகளான கணவன்-மனைவி
தற்போதைய செய்திகள்

லஞ்சப் பணத்தில் நகைக் கடையைத் திறந்த குடிநுழைவுத்துறை அதிகாரிகளான கணவன்-மனைவி

Share:

ஆயர் குரோ, செப்டம்பர்.13-

லஞ்சப் பணத்தில் சொந்த நகைக் கடையைத் திறந்த மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகளான கணவன்-மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது. அந்த இரு குடிநுழைவு அதிகாரிகளான கணவன்- மனைவியும் அந்நிய நாட்டவர்களை எந்தவொரு செல்லத்தக்க பத்திரமின்றியும் சோதனையின்றியும் மலேசியாவிற்குள் நுழைய விட்டு, அதன் வாயிலாக லஞ்சப் பணம் பெற்று வந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சுமார் 6 லட்சம் ரிங்கில் முதலீட்டில் அந்தப் பெண் அதிகாரியின் தம்பி மற்றும் அத்தம்பதியினரின் மகன்கள் பெயரில் நகைக் கடை திறக்கப்பட்டு இருப்பது ஓப் டிகோ என்ற சோதனை நடவடிக்கையின் வழி எஸ்பிஆர்எம் கண்டுபிடித்துள்ளது. 40 வயது மதிக்கத்தக்க கணவனும் மனைவியும் மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 5 நாள் தடுப்புக் காவல் அனுமதியை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்