Mar 22, 2026
Thisaigal NewsYouTube
லஞ்சப் பணத்தில் நகைக் கடையைத் திறந்த குடிநுழைவுத்துறை அதிகாரிகளான கணவன்-மனைவி
தற்போதைய செய்திகள்

லஞ்சப் பணத்தில் நகைக் கடையைத் திறந்த குடிநுழைவுத்துறை அதிகாரிகளான கணவன்-மனைவி

Share:

ஆயர் குரோ, செப்டம்பர்.13-

லஞ்சப் பணத்தில் சொந்த நகைக் கடையைத் திறந்த மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகளான கணவன்-மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது. அந்த இரு குடிநுழைவு அதிகாரிகளான கணவன்- மனைவியும் அந்நிய நாட்டவர்களை எந்தவொரு செல்லத்தக்க பத்திரமின்றியும் சோதனையின்றியும் மலேசியாவிற்குள் நுழைய விட்டு, அதன் வாயிலாக லஞ்சப் பணம் பெற்று வந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சுமார் 6 லட்சம் ரிங்கில் முதலீட்டில் அந்தப் பெண் அதிகாரியின் தம்பி மற்றும் அத்தம்பதியினரின் மகன்கள் பெயரில் நகைக் கடை திறக்கப்பட்டு இருப்பது ஓப் டிகோ என்ற சோதனை நடவடிக்கையின் வழி எஸ்பிஆர்எம் கண்டுபிடித்துள்ளது. 40 வயது மதிக்கத்தக்க கணவனும் மனைவியும் மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 5 நாள் தடுப்புக் காவல் அனுமதியை எஸ்பிஆர்எம் பெற்றுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து