பொதுச் சேவைத்துறையில் பணியாற்றி வருகின்றவர்கள் அனைவரும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மலேசியாவின் பாத்தேக் ஆடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் அரசு ஊழியர்கள், வியாழக்கிழமையை தவிர்த்து மற்ற தினங்களிலும் மலேசிய பாத்தேக் ஆடை அணிவது ஊக்குவிக்கப்படுவர் என்று பொதுச் சேவைத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சுல்காப்லி முகமது தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நடைமுறை நேற்று ஆகஸ்ட் 21 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் பாத்தேக் ஆடை அணிவது, கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் பொதுச் சேவைத்துறை ஊக்குவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


