பொதுச் சேவைத்துறையில் பணியாற்றி வருகின்றவர்கள் அனைவரும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் மலேசியாவின் பாத்தேக் ஆடை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் அரசு ஊழியர்கள், வியாழக்கிழமையை தவிர்த்து மற்ற தினங்களிலும் மலேசிய பாத்தேக் ஆடை அணிவது ஊக்குவிக்கப்படுவர் என்று பொதுச் சேவைத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சுல்காப்லி முகமது தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நடைமுறை நேற்று ஆகஸ்ட் 21 ஆம் தேதி திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் பாத்தேக் ஆடை அணிவது, கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் பொதுச் சேவைத்துறை ஊக்குவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


