Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கை: திரங்கானுவில் 5 ஆண்டுகளில் 113 வியட்னாமியப் படகுகள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கை: திரங்கானுவில் 5 ஆண்டுகளில் 113 வியட்னாமியப் படகுகள் பறிமுதல்

Share:

கோல திரங்கானு, நவம்பர்.15-

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில், திரங்கானு கடற்பகுதியில், சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட, 113 வியட்னாமியப் படகுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மழைக் காலங்களில் திரங்கானு கடலில் கிடைக்கும், உயர் தர மீன் வகைகளுக்காக, வியட்னாமிய மீனவர்கள், பேரலைகளையும் பொருட்படுத்தாமல் திரங்கானு கடல் எல்லைகளுக்குள் வருவதாக நம்பப்படுகின்றது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும், 9 வியட்னாமியப் படகுகளை, மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சியும், மாநில மீன்வளத்துறையும் தடுத்து வைத்துள்ளதாக அம்மாநில வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில், உணவுப் பாதுகாப்பு மற்றும் வர்த்தகப் பொருட்கள் குழுவின் தலைவர், டத்தோ டாக்டர் அஸ்மான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள வியட்னாமிய மீன்பிடி படகுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 225 மில்லியனுக்கு அதிகம் என்றும் ஜாபி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் அஸ்மான் குறிப்பிட்டுள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்