மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரின் அந்தரங்க பெண் செயலாளர் மற்றும் அமைச்சரின் சிறப்பு அதிகாரி ஆகியோர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மினால் கைதுசெய்யப்பட்டிருப்பது, அந்த ஆணையத்தின் முடிவாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஒருவர் ஊழல் புரிந்ததற்கான அடிப்படை முகாந்திரங்கள் இருக்குமானால், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி எஸ்.பி.ஆர்.எம். மிற்கு ஏற்கெனவே தாம் உத்தரவிட்டிருப்பதாக அன்வார் விளக்கினார்.
அமைச்சர் சிவக்குமாரின் முக்கிய அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்து தமக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் பிடிப்பட்டிருப்பதாகவும் அன்வார் மேலும் விவரித்தார்.

Related News

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

இராணுவ உயர்மட்ட ஊழல் தொடர்பாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் கடும் அதிருப்தி: மற்ற துறைகளிலும் ஊழல் பரவியிருக்கூடும் என கவலைத் தெரிவித்தார்

போதைப் பொருள் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் Namewee

பங்கோரில் ஸ்னோர்கெலிங் நடவடிக்கையில் ஈடுபட்ட தைவான் பெண் மரணம்

ரேக்ஸ் டானின் குடும்பத்தினருக்கு எதிராக மிரட்டல் விடுப்பதை நிறுத்துங்கள் - சைஃபுடின் எச்சரிக்கை


