மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரின் அந்தரங்க பெண் செயலாளர் மற்றும் அமைச்சரின் சிறப்பு அதிகாரி ஆகியோர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மினால் கைதுசெய்யப்பட்டிருப்பது, அந்த ஆணையத்தின் முடிவாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஒருவர் ஊழல் புரிந்ததற்கான அடிப்படை முகாந்திரங்கள் இருக்குமானால், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி எஸ்.பி.ஆர்.எம். மிற்கு ஏற்கெனவே தாம் உத்தரவிட்டிருப்பதாக அன்வார் விளக்கினார்.
அமைச்சர் சிவக்குமாரின் முக்கிய அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்து தமக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் பிடிப்பட்டிருப்பதாகவும் அன்வார் மேலும் விவரித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


