மனிதவள அமைச்சர் வி.சிவக்குமாரின் அந்தரங்க பெண் செயலாளர் மற்றும் அமைச்சரின் சிறப்பு அதிகாரி ஆகியோர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்.மினால் கைதுசெய்யப்பட்டிருப்பது, அந்த ஆணையத்தின் முடிவாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
ஒருவர் ஊழல் புரிந்ததற்கான அடிப்படை முகாந்திரங்கள் இருக்குமானால், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி எஸ்.பி.ஆர்.எம். மிற்கு ஏற்கெனவே தாம் உத்தரவிட்டிருப்பதாக அன்வார் விளக்கினார்.
அமைச்சர் சிவக்குமாரின் முக்கிய அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்து தமக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று பேர் பிடிப்பட்டிருப்பதாகவும் அன்வார் மேலும் விவரித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


