Jul 5, 2026
Thisaigal NewsYouTube
தலைமை நீதிபதி நியமனம் குறித்து நாளை அறிவிப்பு வெளியிடப்படலாம்
தற்போதைய செய்திகள்

தலைமை நீதிபதி நியமனம் குறித்து நாளை அறிவிப்பு வெளியிடப்படலாம்

Share:

புத்ராஜெயா, ஜூலை.15-

மலேசியாவின் புதிய தலைமை நீதிபதி குறித்து விவாதிப்பதற்கு இன்று தொடங்கிய ஆட்சியாளர்கள் மாநாட்டில் தாம் ஆஜரானதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.

தலைமை நீதிபதி தொடர்பான முடிவை ஆட்சியாளர்கள் மாநாடு விரைவில் அறிவிக்கும் என்றார் அவர். அந்த அறிவிப்பு வரும் வரை அனைவரும் சற்று பொறுமைக் காக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

தலைமை நீதிபதிகள் நியமனம் குறித்து எதிர்மறையான கருத்துகள் நிலவி வரும் வேளையில் அதற்கு நாளை விடை கிடைக்கலாம் என்று பிரதமர் கோடிக் காட்டினார்.

இன்று புத்ராஜெயாவில் நிர்வாகத் திறன் மீதான அனைத்துலக மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த 30 மாதங்களுக்கு மேலாக நாட்டிற்குத் தலைமையேற்று வருகின்றவர் என்ற முறையில் புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பாக இதுவரை ஆழமாக விவாதித்ததில்லை என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது