Dec 5, 2025
Thisaigal NewsYouTube
தலைமை நீதிபதி நியமனம் குறித்து நாளை அறிவிப்பு வெளியிடப்படலாம்
தற்போதைய செய்திகள்

தலைமை நீதிபதி நியமனம் குறித்து நாளை அறிவிப்பு வெளியிடப்படலாம்

Share:

புத்ராஜெயா, ஜூலை.15-

மலேசியாவின் புதிய தலைமை நீதிபதி குறித்து விவாதிப்பதற்கு இன்று தொடங்கிய ஆட்சியாளர்கள் மாநாட்டில் தாம் ஆஜரானதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.

தலைமை நீதிபதி தொடர்பான முடிவை ஆட்சியாளர்கள் மாநாடு விரைவில் அறிவிக்கும் என்றார் அவர். அந்த அறிவிப்பு வரும் வரை அனைவரும் சற்று பொறுமைக் காக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

தலைமை நீதிபதிகள் நியமனம் குறித்து எதிர்மறையான கருத்துகள் நிலவி வரும் வேளையில் அதற்கு நாளை விடை கிடைக்கலாம் என்று பிரதமர் கோடிக் காட்டினார்.

இன்று புத்ராஜெயாவில் நிர்வாகத் திறன் மீதான அனைத்துலக மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த 30 மாதங்களுக்கு மேலாக நாட்டிற்குத் தலைமையேற்று வருகின்றவர் என்ற முறையில் புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பாக இதுவரை ஆழமாக விவாதித்ததில்லை என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்