Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சில நோயாளிகள் வார்டில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது
தற்போதைய செய்திகள்

சில நோயாளிகள் வார்டில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது

Share:

டிச. 29-

சிரம்பான் Tuanku Ja’afar, மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தாலும் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் வருகை காரணமாகவும் , சில நோயாளிகள் வார்டில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது என எகிரி செம்பிலான் மாநில சுகாதார இயக்குநர் Datuk Dr Harlina Abdul Rashid தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் 26ஆம் நாளன்று இந்த பிரச்சினையை அம்மருத்துவமனை சந்தித்தது. மாநில சுகாதாரத் துறையும் மருத்துவமனை நிர்வாகமும் இந்த தாமதத்தை ஒப்புக்கொண்டன.

தீ விபத்து மருத்துவமனையின் செயல்பாட்டுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது. அவசர சிகிச்சைப் பிரிவில் அதிக நோயாளிகள் இருந்ததும், வார்டில் காலியான படுக்கைகள் இல்லாததும் தாமதத்திற்கு முக்கிய காரணங்களாகும்.

நெரிசலைக் குறைக்க, 6 படுக்கைகள் கொண்ட discharge lounge' ஐயும் 12 படுக்கைகள் கொண்ட holding bay'ஐயும் தற்காலிக வார்டாக ஏற்பாடு செய்யப்பட்டது. தாமதத்தைக் குறைக்கும் முயற்சியாக இந்த வழிமுறை கையாளப்பட்டது என Dr Harlina குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க, அவசர சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு Shiftஇன் சூழ்நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். தேவைப்பட்டால், பிற மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் மாற்றப்படுவார்கள். என்றார். மேலும், லேசான அறிகுறிகளைக் கொண்டவர்கள் அருகிலுள்ள சுகாதார கிளினிக்குகளில் சிகிச்சை பெற Dr Harlina அறிவுறுத்தினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்