Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கணக்கு முடக்கம், அரசியல் நோக்கம் கொண்டது
தற்போதைய செய்திகள்

கணக்கு முடக்கம், அரசியல் நோக்கம் கொண்டது

Share:

தாம் உட்பட தமது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் உள்நாட்டு வருமான வரி வாரியத்தினால் முடக்கப்பட்டது அரசியல் நோக்கம் கொண்டது என்று பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஜைனுதீன் குற்றஞ்சாட்டினார்.

தமக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் நெருக்குதல் அளிக்கும் நோக்கில் இந்த முடக்கம் அமைந்திருப்பதாக முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹம்ஸா ஜைனுதீன் குறிப்பிட்டார்.
இந்த நெருக்குதலும், தலையீடும் மத்திய அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்டதாகும் என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் மக்களின் அபரிமித ஆதரவை பெற்றுவருவதை தொடர்ந்து அதனை ஒடுக்கும் நடவடிக்கையாக இந்த வங்கி கணக்கு முடக்கம் அமைந்திருப்பதாக ஹம்ஸா ஜைனுதீன் குறிப்பிட்டார்.

Related News