ஜோகூர் அரண்மனைக்கு மதிப்பளிக்கும் வகையில், இம்முறை மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி யாரையும் போஸ்டர் பாய்' அல்லது மந்திரி பெசார் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை என்று மஸ்லி மாலிக் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிப்பது தேவையற்றது என்று குறிப்பிட்ட புத்ரி வாங்சா தொகுதி வேட்பாளரான அவர், இறுதி முடிவு ஜோகூர் சுல்தானின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றார்.
கடந்த 2022 ஜோகூர் தேர்தலின் போது பாரிசான் நேஷனல் ஹஸ்னி முகமட்டை வேட்பாளராக அறிவித்திருந்தாலும், இறுதியில் ஆன் ஹாபிஸ் காஸியே மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். தங்களுக்குப் பதவி முக்கியமல்ல, தகுதியான வேட்பாளர்கள் மூலம் மக்களுக்குச் சேவை செய்வதே முதன்மை நோக்கம் என்றும் முன்னாள் கல்வி அமைச்சருமான மஸ்லி மாலிக் வலியுறுத்தினார்.








