Jul 4, 2026
Thisaigal NewsYouTube
அரண்மனைக்கு மதிப்பளித்து பி.எச் 'போஸ்டர் பாய்' வேட்பாளரை அறிவிக்கவில்லை: மஸ்லி மாலிக் விளக்கம்
தற்போதைய செய்திகள்

அரண்மனைக்கு மதிப்பளித்து பி.எச் 'போஸ்டர் பாய்' வேட்பாளரை அறிவிக்கவில்லை: மஸ்லி மாலிக் விளக்கம்

Share:

ஜோகூர் அரண்மனைக்கு மதிப்பளிக்கும் வகையில், இம்முறை மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி யாரையும் போஸ்டர் பாய்' அல்லது மந்திரி பெசார் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை என்று மஸ்லி மாலிக் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிப்பது தேவையற்றது என்று குறிப்பிட்ட புத்ரி வாங்சா தொகுதி வேட்பாளரான அவர், இறுதி முடிவு ஜோகூர் சுல்தானின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றார்.

கடந்த 2022 ஜோகூர் தேர்தலின் போது பாரிசான் நேஷனல் ஹஸ்னி முகமட்டை வேட்பாளராக அறிவித்திருந்தாலும், இறுதியில் ஆன் ஹாபிஸ் காஸியே மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். தங்களுக்குப் பதவி முக்கியமல்ல, தகுதியான வேட்பாளர்கள் மூலம் மக்களுக்குச் சேவை செய்வதே முதன்மை நோக்கம் என்றும் முன்னாள் கல்வி அமைச்சருமான மஸ்லி மாலிக் வலியுறுத்தினார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது