ஷா ஆலாம், நவ.25-
போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் ஆடவன் ஒருவன், தனது காதலியுடன் பிடிபட்டான். இருவரையும் கைது செய்தது மூலம் 33 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு வகையைச் சேர்ந்த போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர்.
கடந்த நவம்பர் 21 ஆம் தேதி சபா பெர்னம், செக்கிஞ்சான் பகுதியில் 31 வயது ஆடவனும், 24 வயது அவனது காதலியும் தங்கியிருந்த வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் பெரிய அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ காவ் கோக் சின் தெரிவித்தார்.








