Apr 17, 2026
Thisaigal NewsYouTube
ஹோர்முஸ் தடையால் மலாக்கா நீரிணையைச் சுற்றி பதற்றம் அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

ஹோர்முஸ் தடையால் மலாக்கா நீரிணையைச் சுற்றி பதற்றம் அதிகரிப்பு

Share:

ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி ஈரான் மற்றும் அமெரிக்கா விதித்துள்ள தடைகள், ஆசியாவின் முக்கியமான கடல் போக்குவரத்து வழித்தடங்களின் பாதுகாப்பு குறித்து புதிய அச்சங்களை எழுப்பியுள்ளது.

இச்சூழலில், இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே அமைந்துள்ள மலாக்கா நீரிணை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் இந்த நீரிணையின் மிகச் சுருங்கிய பகுதி வெறும் 2.7 கிலோமீட்டர் அகலமே கொண்டது. இது ஹோர்முஸ் நீரிணையை விட 10 மடங்கு குறுகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக வர்த்தகத்தின் சுமார் 40 விழுக்காடு இந்த வழித்தடம் வழியாக நடைபெறுகிறது.

குறிப்பாக, மத்திய கிழக்கில் இருந்து சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற ஆசியாவின் முக்கிய பொருளாதார நாடுகளுக்கு செல்லும் எண்ணெய் போக்குவரத்து பெரும்பாலும் இந்த மலாக்கா நீரிணையை சார்ந்தே உள்ளது.

இதனால், இந்த முக்கிய கடல் பாதையின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.

Related News

பணியாளர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு / கதிர்வீச்சு பாதுகாப்பு விதி மீறல்கள் நடந்ததாக மருத்துவமனை மீது குற்றச்சாட்டு

பணியாளர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு / கதிர்வீச்சு பாதுகாப்பு விதி மீறல்கள் நடந்ததாக மருத்துவமனை மீது குற்றச்சாட்டு

பேராவில் 22 மாதங்களில் 2 புதிய தமிழ்ப்பள்ளிகள்: டத்தோ அ. சிவநேசன் தகவல்

பேராவில் 22 மாதங்களில் 2 புதிய தமிழ்ப்பள்ளிகள்: டத்தோ அ. சிவநேசன் தகவல்

எதிர்கட்சித் தலைவர் பதவி காலியிடம் குறித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது

எதிர்கட்சித் தலைவர் பதவி காலியிடம் குறித்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டது

இருக்கையை சாய்ந்து ஆபத்தான முறையில் விரைவுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் - போலீஸ் விசாரணை

இருக்கையை சாய்ந்து ஆபத்தான முறையில் விரைவுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் - போலீஸ் விசாரணை

பௌத்தக் கோட்பாடுகள் மற்றும் 'மடானி' கருத்தாக்கம் குறித்த மாநாடு மே மாதம் நடைபெறுகின்றது

பௌத்தக் கோட்பாடுகள் மற்றும் 'மடானி' கருத்தாக்கம் குறித்த மாநாடு மே மாதம் நடைபெறுகின்றது

பிரிக்பீல்ட்ஸ் நகைக்கடை கொள்ளைச் சம்பவம்: 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

பிரிக்பீல்ட்ஸ் நகைக்கடை கொள்ளைச் சம்பவம்: 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு