ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றி ஈரான் மற்றும் அமெரிக்கா விதித்துள்ள தடைகள், ஆசியாவின் முக்கியமான கடல் போக்குவரத்து வழித்தடங்களின் பாதுகாப்பு குறித்து புதிய அச்சங்களை எழுப்பியுள்ளது.
இச்சூழலில், இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே அமைந்துள்ள மலாக்கா நீரிணை மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் இந்த நீரிணையின் மிகச் சுருங்கிய பகுதி வெறும் 2.7 கிலோமீட்டர் அகலமே கொண்டது. இது ஹோர்முஸ் நீரிணையை விட 10 மடங்கு குறுகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலக வர்த்தகத்தின் சுமார் 40 விழுக்காடு இந்த வழித்தடம் வழியாக நடைபெறுகிறது.
குறிப்பாக, மத்திய கிழக்கில் இருந்து சீனா, ஜப்பான், தென் கொரியா போன்ற ஆசியாவின் முக்கிய பொருளாதார நாடுகளுக்கு செல்லும் எண்ணெய் போக்குவரத்து பெரும்பாலும் இந்த மலாக்கா நீரிணையை சார்ந்தே உள்ளது.
இதனால், இந்த முக்கிய கடல் பாதையின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது.








