May 26, 2026
Thisaigal NewsYouTube
110 பேர் கைது செய்யப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

110 பேர் கைது செய்யப்பட்டனர்

Share:

டிச. 8-

கோலாலம்பூரில் Bukit Bintang உள்ள Jalan Changkat பகுதியில் 9 பொழுதுபோக்கு தலங்களிலும் 7 தங்கும் விடுதிகளிலும் நடத்தப்பட்ட ஒரு சோதனை நடவடிக்கையில், 110 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டுவாசிகள் ஆவர்.

இது குறித்து தகவல் அளித்த கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் Datuk Rusdi Mohd Isa கூறுகையில், 23 முதல் 57 வயதுடைய அனைவரும் அதிகாலை 2 மணி தொடங்கிய நான்கு மணி நேரம் நீடித்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் காவல்துறை அதிகாரிகள் குடிநுழைவுத் துறை, Kuala Lumpur மாநகராட்சி மன்றம், கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய துறைபாகியத் துறைகளின் 254 அதிகாரிகள் ஈடுபட்டனர். இது பொழுதுபோக்கு மையங்களில் நடக்கும் பாலியல் தொழிலை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டது எனவும் Datuk Rusdi குறிப்பிட்டார.

அவர் கூறுகையில், இந்த நடவடிக்கையில், 23 ஆண்கள், 12 பெண்கள் உட்பட 41 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். குற்றவியல் சட்டத்தின் பிரிவு 373Bயின் படியும் 1992 கூட்டரசுப் பிரதேச Kuala Lumpur இன் பொழுதுபோக்குச் சட்டம் பிரிவு 4 இன் படியும் பாலியல் தொழில் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வேலை அனுமதி விதிமுறைகளை மீறுதல், போலி பயண ஆவணங்களைப் பயன்படுத்துதல், காலாவதியான பயண ஆவணங்கள் கொண்ட வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக 36 பேரை மலேசியக் குடிநுழைவுத் துறை கைது செய்தது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு