May 6, 2026
Thisaigal NewsYouTube
என்எஸ்ஆர்சி அதிகாரி போல் நாடகமாடி மோசடி: மொத்த சேமிப்பு நிதியையும் இழந்த நபர்
தற்போதைய செய்திகள்

என்எஸ்ஆர்சி அதிகாரி போல் நாடகமாடி மோசடி: மொத்த சேமிப்பு நிதியையும் இழந்த நபர்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.27-

தேசிய மோசடி மறுமொழி மையமான என்எஸ்ஆர்சியைச் சேர்ந்த அதிகாரி போல் நாடகமாடிய நபரிடம், தனது ஏடிஎம் அட்டை மற்றும் இரகசிய எண்ணைக் கொடுத்த நபர், தனது மொத்த சேமிப்பு நிதியையும் இழந்துள்ளார்.

கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி, பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து பெறப்பட்ட புகாரின் படி, அந்நபருக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு ஒன்றில், என்எெஸார்சி அதிகாரி எனத் தன்னைக் கூறிக் கொண்ட பெண் ஒருவர், அவருக்கு எதிராக மோசடிப் புகார்களை முன்வைத்துள்ளார்.

அரசாங்க நிதியில் நடந்த மோசடியில், பாதிக்கப்பட்ட நபரின் தொலைப்பேசி எண்ணும் இணைக்கப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால் மிகவும் பதற்றமடைந்த அந்த நபர், தனது வங்கி அட்டையையும், அதன் இரகசிய எண்ணையும், அப்பெண் கூறிய இடத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அதன் பின்னர், அந்த வங்கிக் கணக்கில் இருந்து படிப்படியாக தனது சேமிப்பு நிதியானது மாயமாவதை அந்நபர் உணர்ந்ததாக, புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் இது போன்ற மோசடிகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள எப்போதும் விழிப்புடன் இருக்கும்படியும் அவர் எச்சரித்துள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

என்எஸ்ஆர்சி அதிகாரி போல் நாடகமாடி மோசடி: மொத்த சேமிப்பு ந... | Thisaigal News