Oct 18, 2025
Thisaigal NewsYouTube
இந்தியப் பிரஜைகளைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய கும்பல்  முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியப் பிரஜைகளைப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்திய கும்பல் முறியடிப்பு

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.18-

மலேசியாவிற்குப் பிழைக்க வந்த இந்திய நாட்டைச் சேர்ந்த பெண்களை வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்களைச் சுரண்டி பிழைத்து வந்த கும்பலைப் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிஐடி இயக்குநர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.

25 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய 7 பெண்களுக்கு மலேசியாவில் கவர்ச்சிகரமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதாகக் கூறி, அவர்களை வரழைத்து பாலியல் நடவடிக்கையில் அந்த கும்பல் ஈடுபடுத்தியது அம்பலமாகியுள்ளதாக டத்தோ குமார் குறிப்பிட்டார்.

அந்த 7 பெண்களும் கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டு, அவர்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று டத்தோ குமார் தெரிவித்தார்.

Related News

மக்களுக்கான  அரசாங்க உதவிகளில் இன ரீதியான கண்ணோட்டம் வேண்டாம்: தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் பிரதமர் வலியுறுத்து

மக்களுக்கான அரசாங்க உதவிகளில் இன ரீதியான கண்ணோட்டம் வேண்டாம்: தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் பிரதமர் வலியுறுத்து

மலேசிய மக்களின் ஒற்றுமையின் சின்னமாக விளங்குகிறது தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் பெருமிதம்

மலேசிய மக்களின் ஒற்றுமையின் சின்னமாக விளங்குகிறது தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் பெருமிதம்

இந்திய சமுதாயத்திற்கான அரசாங்கத்தின் பல உதவிகள் வெளியில் பேசப்படுவதில்லை

இந்திய சமுதாயத்திற்கான அரசாங்கத்தின் பல உதவிகள் வெளியில் பேசப்படுவதில்லை

இரு குடும்பங்களுக்கு இடையில் கைகலப்பு

இரு குடும்பங்களுக்கு இடையில் கைகலப்பு

தீபாவளியையொட்டி நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் நெரிசல் தொடங்கியது

தீபாவளியையொட்டி நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் நெரிசல் தொடங்கியது

நகைக்கடை திறப்பு விழாவில் அஸ்மின் அலியுடன் டத்தோ ஶ்ரீ சரவணன் கலந்து கொண்டார்

நகைக்கடை திறப்பு விழாவில் அஸ்மின் அலியுடன் டத்தோ ஶ்ரீ சரவணன் கலந்து கொண்டார்