Jul 28, 2026
Thisaigal NewsYouTube
யானை தாக்கி வெளிநாட்டு பிரஜை மரணம்
தற்போதைய செய்திகள்

யானை தாக்கி வெளிநாட்டு பிரஜை மரணம்

Share:

கிளந்தான், மே 14-

கிளந்தான், போஸ்ட் ப்லாவ், கம்போங் ஓம் -மில் வங்காளதேச தொழிலாளி ஒருவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவ தொடர்பில், சம்பந்தப்பட்ட இடத்தில் யானை மின்சார வேலி அமைப்பு நிறுவப்படாததே காரணம் என்று வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் சம்பந்தப்பட்ட தோட்டத்து நிர்வாகத்திடமிருந்து வனவிலங்குகள் தொந்தரவு குறித்து எந்தவொரு புகார்களும் கிடைக்க பெறவில்லை என்று வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறையின் தலைவர் மொஹமட் ஹபீட் ரோஹானி தெரிவித்தார்.

இச்சம்பவத்தை குறித்து குவா முசாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திடமிருந்து கிடைக்க பெற்ற தகவலை அடுத்து, இதுக்குறித்து விசாரணை மேற்கொள்ள தமது தரப்பு தொடங்கியிருப்பதாக மொஹமட் ஹபீட் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் அந்நிய பிரஜையான 29 வயது முஹம்மது நவ்ஷர் அலிமரம் நடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக மொஹமட் ஹபீட் குறிப்பிட்டார்.

Related News

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது

ஜோகூரில் மெகா சோதனை: சட்டவிரோத கால் சென்டர்களில் 330-க்கும் மேற்பட்டோர் கைது