மற்றவர்களுக்கு ஆத்திரமூட்டும் நோக்கத்துடன் புலனத்தில் ஆபாச உள்ளடக்கங்களை அனுப்பியதாக அரசு நிறுவனத்தில் பணிபுரியும் பகுதி நேர ஊழியர் ஒருவர் அலோர்ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
29 வயதுடைய முஹமட் ஜாகீர் ரம்லி என்ற அந்த நபர் கடந்த 2021 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி ஜித்ராவில் உள்ள கம்போங் பாடாங்கில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகைசெய்யயும் 1998 ஆம் ஆண்டு தொடர்புத்துறை மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


