மற்றவர்களுக்கு ஆத்திரமூட்டும் நோக்கத்துடன் புலனத்தில் ஆபாச உள்ளடக்கங்களை அனுப்பியதாக அரசு நிறுவனத்தில் பணிபுரியும் பகுதி நேர ஊழியர் ஒருவர் அலோர்ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
29 வயதுடைய முஹமட் ஜாகீர் ரம்லி என்ற அந்த நபர் கடந்த 2021 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி ஜித்ராவில் உள்ள கம்போங் பாடாங்கில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகைசெய்யயும் 1998 ஆம் ஆண்டு தொடர்புத்துறை மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


