மற்றவர்களுக்கு ஆத்திரமூட்டும் நோக்கத்துடன் புலனத்தில் ஆபாச உள்ளடக்கங்களை அனுப்பியதாக அரசு நிறுவனத்தில் பணிபுரியும் பகுதி நேர ஊழியர் ஒருவர் அலோர்ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
29 வயதுடைய முஹமட் ஜாகீர் ரம்லி என்ற அந்த நபர் கடந்த 2021 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி ஜித்ராவில் உள்ள கம்போங் பாடாங்கில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகைசெய்யயும் 1998 ஆம் ஆண்டு தொடர்புத்துறை மற்றும் பல்லூடகச் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


