Jul 4, 2026
Thisaigal NewsYouTube
தீ விபத்தில் ஆடவர் கருகி மாண்டார்
தற்போதைய செய்திகள்

தீ விபத்தில் ஆடவர் கருகி மாண்டார்

Share:

கோலாலம்பூர், ஜூலை.21-

கோலாலம்பூர், ஜாலான் ஹாங் துவாவில் உள்ள பொது அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டில் நிகழ்ந்த தீச் சம்பவத்தில் ஆடவர் ஒருவர் கருகி மாண்டார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 2.50 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஹாங் துவா தீயணைப்பு, மீட்புப் படையின் 14 வீரர்கள் தீயை முழு வீச்சில் அணைத்ததுடன் தீ அண்டை வீடுகளுக்குப் பரவாமல் கட்டுப்படுத்தினர் என்று அவ்விலாகா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் பத்தாவது மாடியில் உள்ள ஒரு வீடு, 100 விழுக்காடு அழிந்ததுடன் 50 வயது மதிக்கத்தக்க ஆடவரின் உடல், கருகிய நிலையில் வீட்டின் குளியல் அறையில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீச் சம்பவத்திற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வரும் வேளையில் விசாரணைக்கு ஏதுவாக சடலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது