ஜோகூர், கோத்தா திங்கி அருகே உள்ள செடிலி கடற்பகுதியில் கடந்த ஜூன் 6 ஆம் தேதி மீனவர் ஒருவரின் மீன்பிடி வலையில் மனித மண்டை ஓடு ஒன்று சிக்கியுள்ளது. 44 வயது படகு ஓட்டி அதிகாலை 3 மணியளவில் இதைக் கண்டெடுத்து போலீஸ் துறையிடம் ஒப்படைத்தார்.
இந்த மண்டை ஓடு 20 முதல் 30 வயதிற்குட்பட்ட ஒரு வயது வந்த ஆணுடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது தற்போது கோத்தா திங்கி மருத்துவமனையின் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டு, சந்தேகத்திற்கிடமான மரணம் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் அல்லது இது குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் கோலா செடிலி காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர் என்று கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யூசுப் ஒத்மான் தெரிவித்தார்.








