May 6, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கில் இவ்வாண்டில் 20 நில அமிழ்வுகளும், 68 நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

பினாங்கில் இவ்வாண்டில் 20 நில அமிழ்வுகளும், 68 நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன

Share:

ஜார்ஜ்டவுன், நவம்பர்.21-

பினாங்கு மாநிலத்தில் இவ்வாண்டில் மட்டும் மொத்தம் 20 நில அமிழ்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாநில சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் மொத்தம் 8 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே வேளையில், இவ்வாண்டில் மொத்தம் 68 நிலச்சரிவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டில் 28 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.

இதனிடையே நில அமிழ்வு ஏற்படவுள்ள பகுதிகளை முன்கூட்டியே கண்டறிய, நிலத்தடி நீர் மற்றும் கழிவுநீர் குழாய்களில், தரையில் ஊடுருவக் கூடிய ரேடார் கருவியானது, சென்சார் அமைப்புடன் இணைக்கப்பட வேண்டும் என்று பினாங்கு மாநில உள்கட்டமைப்புத் துறை தலைவர் ஸைரில் கீர் ஜொஹாரி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இந்த சென்சார்கள் குழாய் ஓட்டத்தில் உள்ள இடையூறுகள் குறித்து முகமைகளுக்கு எச்சரிக்கை செய்வதுடன், நில அமிழ்வு ஏற்படுவதற்குக் காரணமானக் கசிவுகளைக் கண்டறிய உதவும் என்றும் ஸைரில் கீர் ஜொஹாரி பரிந்துரைத்துள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்