மலாக்கா,ஜன.10
தமது இரண்டு வளர்ப்பு மகள்களை கடந்த ஐந்து ஆண்டு காலமாக பாலியல் பலாத்காரம் புரிந்து வந்ததாக கூறப்படும் பாதுகாவலர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
13,15 வயதுடைய அந்த இரு சகோதரிகள், தொடக்கப்பள்ளியில் பயின்று கொண்டிருந்த காலக்கட்டத்தில் தங்களின் வளர்ப்புத் தந்தையின் வக்கிர செயலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ள போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டதாக மலாக்கா போலீஸ் துணைத் தலைவர் உதவி கமிஷனர் முஹமாட் நஸ்ரி நவாவி தெரிவித்தார்.
மலாக்கா, தஞோங் க்லிங் கில் Burger Stall கடையை நடத்தி வரும் 39 வயதுடைய தங்களின் தாயார், வியாபாரத்திற்கு சென்றிருந்த வேளையில் தமது தந்தையின் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவ்விரு சகோதரிகளும் தங்கள் போலீஸ் புகாரில் குறிப்பிட்டுள்ளனர் என்று முஹமாட் நஸ்ரி குறிப்பிட்டார்.








