காஜாங் — செமினி சாலையில் ஒரே இடத்தில் நடந்த இரண்டு விபத்துகளுக்கும் எண்ணெய் கொட்டப்பட்டதுதான் காரணம் எனப் பரவி வரும் தகவலைப் போலீசார் மறுத்துள்ளனர். கன மழை மற்றும் வழுக்கும் சாலை காரணமாகவே இந்த விபத்துகள் நிகழ்ந்ததாகக் காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் நஸ்ரோன் அப்துல் யூசுப் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை, கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மின்கம்பத்தில் மோதிய நிலையில், அதன் பிறகு வந்த வாகனங்கள் விபத்துக்குள்ளான காரைக் கண்டு திடீரென பிரேக் போட்டதால் நிலைதடுமாறியுள்ளன.
முதல் விபத்தில் காரில் இருந்து கசிந்த எண்ணெயைத் தீயணைப்புத் துறையினர் உடனடியாகச் சுத்தம் செய்துவிட்டதாகவும், திட்டமிட்டு எண்ணெய் கொட்டப்பட்டதாகக் கூறப்படுவது உண்மையில்லை என்றும் நஸ்ரோன் விளக்கமளித்துள்ளார்.








