பினாங்கு, சுங்ஙை பாகாப் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த கைதி ஒருவர்,மிக லாவகமாக தப்பிச்சென்றுள்ளார். நேற்று பிற்பகல் 3.56 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கைதியை தேடும் நடவடிக்கையை போலீசார் முழு வீச்சில் முடுக்கியுள்ளதாக செபராங் பிறை செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் இங் ஆ தியாம் தெரிவித்தார். நோர்டின் அஹ்மாட் என்று அடையாளம் கூறப்பட்ட 54 வயதுடைய அந்த கைதி, காசநோய் தொடர்பான சிகிச்சைக்கு சுங்ஙை பாகாப் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். டி சட்டை மற்றும் காற்சட்டை மட்டுமே அணிந்திருந்த அந்த கைதியை பிடிப்பதற்கு போலீசார் ஓபி துதோப் எனும் தேடுதல் வேட்டையை தொடங்கியிருப்பதாக இங் ஆ தியாம் குறிப்பிட்டார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


