பினாங்கு, சுங்ஙை பாகாப் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த கைதி ஒருவர்,மிக லாவகமாக தப்பிச்சென்றுள்ளார். நேற்று பிற்பகல் 3.56 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கைதியை தேடும் நடவடிக்கையை போலீசார் முழு வீச்சில் முடுக்கியுள்ளதாக செபராங் பிறை செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் இங் ஆ தியாம் தெரிவித்தார். நோர்டின் அஹ்மாட் என்று அடையாளம் கூறப்பட்ட 54 வயதுடைய அந்த கைதி, காசநோய் தொடர்பான சிகிச்சைக்கு சுங்ஙை பாகாப் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். டி சட்டை மற்றும் காற்சட்டை மட்டுமே அணிந்திருந்த அந்த கைதியை பிடிப்பதற்கு போலீசார் ஓபி துதோப் எனும் தேடுதல் வேட்டையை தொடங்கியிருப்பதாக இங் ஆ தியாம் குறிப்பிட்டார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது


