மோட்டார் சைக்கிளில் பயணித்த பாதுகாவலர் ஒருவர், வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு, சக்கரத்தில் அரைப்பட்டு, உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று காலை 9 மணியளவில் மலாக்கா, அலோர் காஜா– மலாக்கா தெங்ஙா நெடுஞ்சாலையில் புகிட் பியாத்து அருகில் நிகழ்ந்தது.
46 வயது ஆர். முரளி என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர். அவர் பயணித்த ஹொன்டா NF 100 ரக மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட வாகனத்தை அடையாளம் காண இயலவில்லை என்று மலாக்கா தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்தோபர் பதோட் தெரிவித்தார்.
சவப்பரிசோதனைக்காக அந்த நபரின் உடல் மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


