மோட்டார் சைக்கிளில் பயணித்த பாதுகாவலர் ஒருவர், வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு, சக்கரத்தில் அரைப்பட்டு, உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று காலை 9 மணியளவில் மலாக்கா, அலோர் காஜா– மலாக்கா தெங்ஙா நெடுஞ்சாலையில் புகிட் பியாத்து அருகில் நிகழ்ந்தது.
46 வயது ஆர். முரளி என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர். அவர் பயணித்த ஹொன்டா NF 100 ரக மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட வாகனத்தை அடையாளம் காண இயலவில்லை என்று மலாக்கா தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்தோபர் பதோட் தெரிவித்தார்.
சவப்பரிசோதனைக்காக அந்த நபரின் உடல் மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அந்த போலீஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


