Mar 10, 2026
Thisaigal NewsYouTube
நீதிபதி நஸ்லான் கஸாலி, நீதித்துறை நன்னெறி கோட்பாட்டை மீறியுள்ளாரா?
தற்போதைய செய்திகள்

நீதிபதி நஸ்லான் கஸாலி, நீதித்துறை நன்னெறி கோட்பாட்டை மீறியுள்ளாரா?

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட SRC International வழக்கிற்குத் தலைமையேற்ற நீதிபதி நஸ்லான் கஸாலி, நீதித்துறை நன்னெறி கோட்பாட்டை மீறியுள்ளார் என்று அமைச்சர் அஸாலினா ஓத்மான் உறுதிபடுத்தியது தொடர்பில் நாட்டின் தலைமை நீதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஆகியோரின் நிலைப்பாடு என்ன என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நஜீப் சம்பந்தப்பட்ட SRC International வழக்கில் நீதிபதி நஸ்லான் கஸாலிக்குத் தனிப்பட்ட நலன் சார்ந்த அம்சங்கள் இருந்தன என்றும் அவர் நீதித்துறை நன்னெறி கோட்பாட்டை மீறியுள்ளார் என்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அமைச்சர் அஸாலினா ஓத்மான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் நாட்டின் நீதித்துறைக்கு தலைமையேற்றுள்ள தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் மற்றும் சட்டத்துறைக்குத் தலைமையேற்றுள்ள இட்ரூஸ் ஹருன் ஆகியோரின் நிலைப்பாடு என்ன என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்கஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து