Jun 15, 2026
Thisaigal NewsYouTube
நீதிபதி நஸ்லான் கஸாலி, நீதித்துறை நன்னெறி கோட்பாட்டை மீறியுள்ளாரா?
தற்போதைய செய்திகள்

நீதிபதி நஸ்லான் கஸாலி, நீதித்துறை நன்னெறி கோட்பாட்டை மீறியுள்ளாரா?

Share:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட SRC International வழக்கிற்குத் தலைமையேற்ற நீதிபதி நஸ்லான் கஸாலி, நீதித்துறை நன்னெறி கோட்பாட்டை மீறியுள்ளார் என்று அமைச்சர் அஸாலினா ஓத்மான் உறுதிபடுத்தியது தொடர்பில் நாட்டின் தலைமை நீதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஆகியோரின் நிலைப்பாடு என்ன என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

நஜீப் சம்பந்தப்பட்ட SRC International வழக்கில் நீதிபதி நஸ்லான் கஸாலிக்குத் தனிப்பட்ட நலன் சார்ந்த அம்சங்கள் இருந்தன என்றும் அவர் நீதித்துறை நன்னெறி கோட்பாட்டை மீறியுள்ளார் என்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அமைச்சர் அஸாலினா ஓத்மான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் நாட்டின் நீதித்துறைக்கு தலைமையேற்றுள்ள தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் மற்றும் சட்டத்துறைக்குத் தலைமையேற்றுள்ள இட்ரூஸ் ஹருன் ஆகியோரின் நிலைப்பாடு என்ன என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்கஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்