Dec 1, 2025
Thisaigal NewsYouTube
மஞ்சுங்கில் 78 வயது முதியவர் மண்வெட்டியால் வெட்டிக் கொலையா? – போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

மஞ்சுங்கில் 78 வயது முதியவர் மண்வெட்டியால் வெட்டிக் கொலையா? – போலீஸ் விசாரணை

Share:

ஈப்போ, டிசம்பர்.01-

நேற்று மஞ்சோங்கில் உள்ள ஒரு வீட்டில், 78 வயது முதியவர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று மதியம் அவ்வீட்டிலுள்ள அறை ஒன்றில், அந்த முதியவர் தலை மற்றும் முகத்தில் இரத்தம் வழிந்த நிலையில் குடும்பத்தினரால் கண்டறியப்பட்டார்.

மேலும், அதே வீட்டில், இரத்தக் கறையுடன் மண்வெட்டி ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்முதியவர் அந்த மண்வெட்டியால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மஞ்சோங் மாவட்ட போலீஸ் உதவி ஆணையர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ராஜா பெர்மைசுரி பைனுன் மருத்துவமனையில் நடந்த சவப் பரிசோதனையில், அம்முதியவரின் தலையில் கூறான ஆயுத்தத்தால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது.

Related News

கேமரன் மலை தானா ராத்தா நிலச்சரிவுக்கு தொடர் கனமழையே காரணம்

கேமரன் மலை தானா ராத்தா நிலச்சரிவுக்கு தொடர் கனமழையே காரணம்

வீட்டில் பறிமுதல் செய்த பொருட்களைப் பட்டியலிட்டு எஸ்பிஆர்எம் திருப்பித் தர வேண்டும் - ஆல்பெர்ட் தே மனைவி கோரிக்கை

வீட்டில் பறிமுதல் செய்த பொருட்களைப் பட்டியலிட்டு எஸ்பிஆர்எம் திருப்பித் தர வேண்டும் - ஆல்பெர்ட் தே மனைவி கோரிக்கை

பகடிவதை எதிர்ப்பு சட்ட மசோதா 2025: நாடாளுமன்றத்தில் இன்று முதல் வாசிப்பிற்காக தாக்கல்

பகடிவதை எதிர்ப்பு சட்ட மசோதா 2025: நாடாளுமன்றத்தில் இன்று முதல் வாசிப்பிற்காக தாக்கல்

Mount Erskine அருகே கோர விபத்து: பெண் தொழிலாளர் பலி, 7 பேர் படுகாயம்

Mount Erskine அருகே கோர விபத்து: பெண் தொழிலாளர் பலி, 7 பேர் படுகாயம்

சுகாதார மைய விவகாரம்: 171 ஆடவர்களின் தடுப்புக் காவல் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது

சுகாதார மைய விவகாரம்: 171 ஆடவர்களின் தடுப்புக் காவல் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது

செபூத்தே, தாமான் யுனைடெட் அடுக்ககத்தில் நிலச்சரிவு: பாதிக்கப்பட்டோருக்குத் தற்காலிக வீடு!

செபூத்தே, தாமான் யுனைடெட் அடுக்ககத்தில் நிலச்சரிவு: பாதிக்கப்பட்டோருக்குத் தற்காலிக வீடு!