May 27, 2026
Thisaigal NewsYouTube
பாபாகோமாவிற்கு எதிராக ஐஜிபி வழக்கு
தற்போதைய செய்திகள்

பாபாகோமாவிற்கு எதிராக ஐஜிபி வழக்கு

Share:

கோலாலம்பூர், டிச. 28-


தமக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக சர்ச்சைக்குரிய அரசியல்வாதியும், விதாண்டவாதியும், அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் உச்சமன்ற உறுப்பினருமான பாபாகேமாவிற்கு எதிராக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் அவதூறு வழக்கை தொடுத்துள்ளார்.

வான் முகமட் அஸ்ரி வான் டெரிஸ் என்ற பாபாகோமா, ஐஜிபி.யை நோக்கி, தடித்த சொற்களை பயன்படுத்தியதன் விளைவாக அந்த உயர் போலீஸ் அதிகாரி தமது வழக்கறிஞர் மூலம் இந்த அவதூறு வழக்கை சார்வு செய்துள்ளார்.

கெளரவ விபச்சாரக் கைதி என்றும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கால்களில் விழுந்துக்கிடக்கிறார் என்றும் கூறி, கடும் சொற்களை கொண்டு டான்ஸ்ரீ ரஸாருடினை நோக்கி பிரயோகித்து இருப்பதாக பாமாகோமாவிற்கு எதிரான அவதூறு வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாபாகோமாவிற்கு எதிரான இந்த அவதூறு வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டதாக ஐஜிபியின் வழக்கறிஞர் ராம் குமார் தெரிவித்துள்ளார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு