Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

Zakir Naik நாட்டில் உரையாற்றுவதற்கு அனுமதிக்கப்படுகிறரா? போலீஸ் துறை விளக்கம் அளிக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், பிப்.5-

மலேசியாவில் உரை நிகழ்த்துவதற்கும், சொற்பொழிவு ஆற்றுவதற்கும் சர்ச்சைக்குரிய சமயப் போதகர் Dr Zakir Naik- க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற போதிலும் அந்த சமயப் போதகர் பொதுவில் சொற்பொழிவு ஆற்றியதாக வெளிவந்துள்ள தகவல் குறித்து அரச மலேசிய போலீஸ் படை விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர் வலியுறுத்தியுள்ளார்.

அகப்பக்க செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவல்படி Zakir Naik, பெர்லிஸ் மாநிலத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் உரை நிகழ்த்தியதாக தெரிவித்துள்ளது.

அந்த சமயப் போதகருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை இன்னமும் அமலில் உள்ளதா, இல்லையா? என்பது குறித்து போலீஸ் படை குறிப்பாக ஐஜிபி. யிடம் தாம் கேட்க விரும்புவதாக ராயர் குறிப்பிட்டார்.

Zakir Naik க்கு விதிக்கப்பட்ட தடை இன்னமும் அமலில் இருக்கிறது என்றால் பெர்லிஸ் மாநிலத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் உரையாற்றுவதற்கு அவர் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் என்று நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ராயர் வினவினார்.

தனக்கு விதிக்கப்பட்ட தடையையும் மீறியிருப்பாரேயானால் அவருக்கு எதிராக போலீஸ் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராயர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

Zakir Naik நாட்டில் உரையாற்றுவதற்கு அனுமதிக்கப்படுகிறரா? ... | Thisaigal News