பினாங்கில் பெரு நிலத்திற்கும், தீவுக்கும் இடையிலான பெர்ரி சேவைக்கு கட்டண விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, புதிய கட்டணம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சத்தை கருத்தில் கொண்டு, நாளை செவ்வாய்க்கிழமை முதல் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கான கட்டணத்தில் 30 விழுக்காடு கழிவு வழங்கப்படவிருப்பதாக பெர்ரி சேவையை நிர்வகித்து வரும் பினாங்கு துறைமுகம் எஸ்.டி.என். பி.ஹ்.டி நிறுவனம் அறிவிததுள்ளது.
இந்த சிறப்புக்கட்டண கழிவு நாளை தொடங்கி அடுத்த ஆண்டு ஜுன் 30 ஆம் தேதி வரையில் நடப்பில் இருக்கும் என்று பினாங்கு துறைமுகம் எஸ்.டி.என். பி.ஹ்.டி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த புதிய கட்டணத்தின் கீழ் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு விதிக்கப்பட்ட 2 வெள்ளி 50 காசு கட்டணம், ஒரு வெள்ளி 75 காசாக குறைக்கப்படுகிறது என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related News

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து


