ஜாலான் சுல்தான் இஸ்மாயில், ஜாலான் அம்பாங் ஆகிய இரு பொழுது போக்கு மையங்களில் மேற்கொண்ட திடீர் சோதனையில் 25 பெண் வாடிக்கையாளர் சேவைகள் (GRO) நேற்று அதிகாலையில் போலீசார் கைது செய்தனர்.
அந்த பொழுது போக்கு மையத்தில் வேலை செய்வதாக கருதப்படும் இரண்டு உள்ளூர் வாசிகள், ஒரு வெளிநாட்டு ஆடவன் மேலும் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்ஙி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெல்ஹாம் யஹாயா தெரிவித்தார்.
22 முதல் 37 வயதுக்கும் உட்பட்டவர்களிடமிருந்து கைத்தொலைபேசிகள், பொழுதுபோக்கு உபகரணங்கள், மைக்ரோப்போன், வணிக ரசிட்டுகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட உள்ளூர் வாசிகளான இரண்டு பிரஜைகள் நான்கு நாள் தடுப்பு காவலிலும், 26 வெளிநாட்டு பிரஜைகள் 14 நாள் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டுள்ளதாக நோர் டெல்ஹாம் விளக்கினார்.








